Skip to main content

உடம்பின் நடுப்பகுதி வயிறு.

அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.

இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,

நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.

😊

தொந்தி கனக்க விடாதீர்கள்.

தொந்தரவு வரும்.

மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும்.

😊

ஒரு மனிதன்

வியாதியுடன் வாழப்போகிறானா,

வீரியமுடன் வாழப்போகிறானா,

நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த நாற்பது.

😊

நிறைய வேலை செய்வதால்

நமக்கு நிம்மதி போவதில்லை.

உடம்பு உருக்குலைவதில்லை.

😊

என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான்

மனிதன்மீது பாரமாக இறங்கி

அவனை நொறுக்கிவிடுகின்றன.

😊

பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.

கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.

நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

ஆரவாரம் வேண்டாம்.

அலட்டிக் கொள்ளாதீர்கள்.

பொறுப்புக்களை

சீராக நிறைவேற்றுங்கள்.

😊

அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.

அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

😊

தினசரி மத்தியானம்

ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.

இரவு பன்னிரண்டு மணிக்குமேல்

எக்காரணத்தை முன்னிட்டும்

விழித்திருக்காதீர்கள்.

😊

பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.

அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.

😊

ஆண்டவனை நினையுங்கள்.

இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.

நான் தப்பு பண்ண விடாதே அப்பா.“

என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

😊

முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.

😊

டென்ஷன் இல்லாமல் இருங்கள்.

பென்ஷன் வாங்கலாம்.

😊

ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,

அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.

😊

அதனால்தான் சொல்லுகிறேன்.

கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் .

Comments